இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும்இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள்எண்ணிக்கைமிகக் குறைவு. அடிக்கடி கரண்ட்கட் ஆகும்சமயங்களில் உடனடியாக தானாகவேபேட்டரியில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில
லைட்டுகள்உள்பட வேலைசெய்யக் கூடஇன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும்கோடைக்காலம் நெருங்கநெருங்க இன்வர்ட்டரின்தேவை மிகஅத்தியாசவசியமாகிறது.எல்லா மின்சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சிலஆபத்துகள் உள்ளன.
எல்லா மின் சாதனங்களைவிடவும் இதில்மறைமுகமான ஆபத்துஒன்றும் இருக்கிறது. நித்துஎன்பவர்இது குறித்துதனது ட்வீட்டர்பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும்எச்சரிக்கையாகஇருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயதுமகள்,எல்லோரும்அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்துவந்தான் மகன். வரும் போதேவீட்டினுள்துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலேகுப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போதுநாறுகிறமாதிரி இருக்கிறது” என்பது மகனின்கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம்இருந்ததால் அப்படிஎதுவும் வித்தியாசம்தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்துகாலையிலும்அதே ஆர்ப்பாட்டம்செய்தான். அன்றுமாலையும் மீண்டும்அதே ஆர்ப்பாட்டம்.அப்போது தான்எனக்கும் அந்ததுர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின்கீழே பல்லிஎதுவும் இறந்துகிடக்க வாய்ப்புண்டு.நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிதுநேரத்தில் பாட்டரிஅருகில் ஃபேன்ஒன்றைவைத்திருந்தார்கணவர். “பேட்டரிஓவர் ஹீட்ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்”என்றார் அவர். சிறிது நேரம்கழித்து மீண்டும்அந்த அறைக்குள்நுழைந்து பார்த்தால்… பேச்சுமூச்சுஇல்லாமல் கணவர்மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர்தெளித்தும் பயன் இல்லை.மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால்மயங்கிவிழுந்தார்என்று மருத்துவர்கள்கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.
திடீரென்று பாடத்தில் படித்ததுநினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட்ஆனால்‘ஹைடரஜன்சல்ஃபேட்’ வாயுஉற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின்துர்நாற்றத்தைஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால்கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும்.அடுத்துநுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம்ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணிநேரங்களில்மரணம் என்பதெல்லாம்நான் கூகுளில்தேடிக் கண்டுபிடித்துஅதிர்ந்த தகவல்கள்.நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இதுபெரியவர்களை தான்அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன்.மருத்துவரின் தீவிரசிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாககண்விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட்இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான்அந்தகெட்ட நாத்தமும்வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலேபோயிடலாமுன்னுயோசிக்கிறதுக்குள் ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.
சில மணி நேரங்களுக்குப்பிறகு வீடுதிரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன்நெஞ்சைப்பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்குஇருமத் தொடங்கினார்.இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம்மூன்று நாட்களுக்காவதுஇருமல்உள்ளிட்டபாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில்தகவல் கிடைத்தது. ஆனாலும்மூன்றுநாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டேஇருந்தது. இப்போதுஅதற்கானமருந்துகளைகணவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த அதிர்ச்சித் தகவல்குறித்த செய்தியைபகிர்ந்த போதுஇன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர்கூறிய சிலஅட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும்அதனைமுறையாகப்பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அதுஒழுங்கானநிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்றசீனத்தயாரிப்புகள்எல்லாம் மார்க்கெட்டில்சல்லிசான விலையில்கிடைக்கின்றன.அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர்ஹீட்டில் பேட்டரிவெடித்துச் சிதறும்வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளைவைக்கவேண்டும். பேட்டரிகளைமுழுக்க மூடிவைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்குஒருமுறையாவதுஇன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலைசெய்கிறதாஎன்பதைமுறையாக பயிற்ச்சிபெற்ற நபரைவைத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயேஇருக்கும்சமயங்களில்நடுவில் குறைந்தபட்சம்அரை மணிநேரமாவது அவ்வப்போதுஆஃப்செய்துவைப்பதும் நல்லது.
No comments:
Post a Comment