Thursday 20 August 2015

கடல், குளத்தில் குளிக்கக்கூடாது என மாணவர்களை அறிவுறுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
* பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் நேராக வீட்டுக்கு செல்லவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துதல்.
* கடல், குளத்தில் மாணவர்கள் குளிக்கக்கூடாது
* கடல், ஏரி, குளம், குட்டை ஆகிய எந்த நீர் நிலைகளிலும் மாணவ-மாணவிகளை குளிக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தவேண்டும்.
* பள்ளிக்கூடங்களில் புதர்கள், பழைய மரங்கள் விழும் நிலையில் இருந்தால் அவற்றை அகற்றுதல்.
* மாணவ-மாணவிகள் நீர் நிலைகளுக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தொட்டிகள், கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் இருக்கவேண்டும். அவை மூடப்பட்டு இருக்கின்றனவா? என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்தல்.
* இடி, மின்னல் போன்றவற்றில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாக்க அவர்களை மரங்கள் அடியில் ஒதுங்கக்கூடாது என்று சொல்லுதல்.
* பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மின்சார சுவிட்சுகள் சரியாக உள்ளனவா? என்பதை தலைமை ஆசிரியர் சரிபார்க்கவேண்டும்.
* பழுதடைந்த மின் கம்பிகளை தொடக்கூடாது, பழுதடைந்த மின்கம்பங்கள் அருகே நிற்கக்கூடாது என்று மாணவ-மாணவிகளிடம் அறிவுறுத்துதல்.
* கூடிய மட்டும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இறை வணக்க கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment