Monday 24 August 2015

19 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம்! பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை!

பேரவை கூட்டத் தொடர் 19 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.
 தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) கூடும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பேரவை கூட்டத் தொடரின் தேதிகளை முடிவு செய்வதற்காக, பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரவைத் தலைவர் ப.தனபால் அறையில் பிற்பகல் 1.15 மணி முதல் 2 மணி வரை இந்தக் கூட்டம் நடந்தது.
 இந்தக் கூட்டத்தில், அவை முன்னவரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசு கொறடா மனோகரன் ஆகியோரும், சக்ரபாணி (திமுக) ஆறுமுகம் (கம்யூனிஸ்ட்), பீமாராவ் (மார்க்சிஸ்ட்), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கதிரவன் (பார்வர்டு பிளாக்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
 இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, பேரவை நிகழ்ச்சிநிரல் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார். அதன் விவரம்:

ஆகஸ்ட் 24- சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள்- மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பேரவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.

ஆகஸ்ட் 25 - வீட்டு வசதி- நகர்ப்புற வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை

ஆகஸ்ட் 26 - தொழிலாளர்- வேலைவாய்ப்புத் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கைத்தறி - துணி நூல் மற்றும் கதர்த் துறை, கதர் கிராமத் தொழில்கள்- கைவினைப்பொருட்கள்.

ஆகஸ்ட் 27 - கட்டடங்கள் (பொதுப்பணித் துறை), பாசனம் (பொதுப்பணித் துறை)

ஆகஸ்ட் 28 - ஓணம் விடுமுறை.

ஆகஸ்ட் 29, 30  - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 31- சமூகநலம்- சத்துணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் துறை,
 தகவல் தொழில்நுட்பவியல் துறை.

செப்டம்பர் 1-உயர்கல்வி, பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி- செய்தித் துறை.

செப்டம்பர் 2-நெடுஞ்சாலைகள்- சிறு துறைமுகங்கள் துறை, சுற்றுலா- கலை பண்பாடு.

செப்டம்பர் 3-கூட்டுறவு (கூட்டுறவு, உணவு- நுகர்வோர் பாதுகாப்புத் துறை)

செப்டம்பர் 4-தொழில் துறை, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் மற்றும் நிர்வாகம் (உள் துறை, மது விலக்கு -ஆயத்தீர்வைத் துறை) போக்குவரத்து.

செப்டம்பர் 5, 6 அரசு விடுமுறை.

செப்டம்பர் 7 முதல் 11-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டம் இல்லை.

செப்டம்பர் 12, 13 அரசு விடுமுறை.

செப்டம்பர் 14-வருவாய்த் துறை, இயற்கைச் சீற்றங்கள் துயர் தணிப்பு, செய்தி- விளம்பரம், எழுதுபொருள்- அச்சு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை.

செப்டம்பர் 15-கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம்.

செப்டம்பர் 16-ஆதிதிராவிடர்- பழங்குடியினர்நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்பட்டோர்- சிறுபான்மையினர்நலத் துறை.

செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தி- அரசு விடுமுறை.

செப்டம்பர் 18-நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறை.

செப்டம்பர் 19-பேரவைக் கூட்டம் இல்லை. ]

செப்டம்பர் 20 அரசு விடுமுறை

செப்டம்பர் 21-வணிக வரிகள் - பத்திரப்பதிவுத் துறை, முத்திரைத்தாள்- பத்திரப்பதிவு. இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

செப்டம்பர் 22-காவல் (உள் துறை, மது விலக்கு- ஆயத்தீர்வைத் துறை) தீயணைப்பு- மீட்புப் பணிகள்.

செப்டம்பர் 23-நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் (சட்டத் துறை), பணியாளர்- நிர்வாக சீர்திருத்தத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை.

செப்டம்பர் 24-பக்ரீத் அரசு விடுமுறை.

செப்டம்பர் 25-எரிசக்தித் துறை, மதுவிலக்கு- ஆயத்தீர்வை.

செப்டம்பர் 26, 27 அரசு விடுமுறை.

செப்டம்பர் 28-இந்து சமய அறநிலையத் துறை (சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறை) வனம், சுற்றுச்சூழல்.

செப்டம்பர் 29-பொதுத் துறை, மாநில சட்டப் பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, திட்டம், வளர்ச்சி- சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள்-ஏனைய ஓய்வுக்கால நன்மைகள், மற்றும் அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றலும்.

இந்தத் திட்டப்படி  பேரவை அலுவல்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார்.

சட்டப் பேரவை தினமும் காலை 10 மணிக்குக் கூடும் என்றும், மானியக் கோரிக்கைகள் விவாதிக்கும் அனைத்து நாள்களிலும் கேள்வி நேரம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment