ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர்அருகேஅரசுப்பள்ளியில் அனைத்துநவீனவசதிகளும்உள்ளதால்,இப்பள்ளியில்தங்களின்குழந்தைகளைசேர்க்கபெற்றோர்கள்ஆர்வம்காட்டிவருகின்றனர். இதனால்,கடந்த மூன்றுஆண்டுகளில்இப்பள்ளியில்மாணவர் சேர்க்கை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள்என்றாலே அடிப்படைவசதிகளும், சுகாதார வசதிகளும்ஏதும் இன்றிவெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க முடியாத கட்டிடங்கள்என்பதேபொதுவானகருத்தாக உள்ளது.
இதனால், கிராமங்களில் வசிக்கும்பலரும் தொலைதூரத்தில் இருக்கும்தனியார்பள்ளிகளில்தங்களின் குழந்தைகளைசேர்க்கத் துடிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில்போதுமானஅடிப்படைவசதிகள் இல்லாதால்தமிழகம் முழுவதும்மாணவர்களின் எண்ணிக்கையும்குறைந்தது. ஆனால், ராமநாதபுரம்மாவட்டம் முதுகுளத்தூர்அருகே அரசுத்துவக்கப்பள்ளியைநாடி பெற்றோர்கள் அதிகளவு வரத்துவங்கியுள்ளனர்.
முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செல்வநாயகபுரம் ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்டமாணவர்கள் தொடக்க கல்வி பயிலஅருகே உள்ளமுதுகுளத்தூர் சென்று வந்தனர்.இந்நிலையில் செல்வநாயகபுரம்ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு2011ம் ஆண்டில்தலைமைஆசிரியராகவந்தார் ஆரோக்கியஜோசப்ராஜ்.
தனது சக ஆசிரியர்களானவெங்கட சுப்பிரமணியன், செந்தில் நாகராஜன்மற்றும் பரிஜான்பானுஆகியோர்ஒத்துழைப்புடன் பொது நிதி மற்றும் அனைவருக்கும்கல்வி இயக்கம்சார்பில்,வழங்கப்பட்டநிதியில், மூன்றுபுதிய கட்டடவசதிகள், மேற்கத்தியகழிப்பிட வசதிகள்எனபள்ளியின்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டன.
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதுடன்மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கதன்னார்வலர்கள் மூலம்தேவையான இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்களும்வாங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்குபடிக்கும்போதேசுற்றுச்சூழல் கல்வியாக மரம் வளர்ப்பது குறித்துபயிற்சி அளித்துவருவதுபெற்றோர்களைவியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராகமாணவர்களது சீருடை மட்டுமின்றி, டை, பெல்ட், அடையாளஅட்டைகளும்வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளில், பெயர், முகவரியுடன்,அவர்களது ரத்தவகையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம மக்களின் ஒத்துழைப்பேகாரணம்:
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்ஆரோக்கிய ஜோசப்ராஜ்கூறும்போது, "இந்தஆண்டுமூன்றாம் ஆண்டுஆங்கில வழிசமச்சீர் கல்வியைஅறிமுகம் செய்துள்ளோம்.மாணவர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள்அரசு நிதிஉதவிமற்றும்உள்ளுர் மக்களின்ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றுஆண்டுகளுக்குமுன்னதாக 56ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கைஇந்த ஆண்டு100ஐஎட்டியுள்ளது. மாவட்ட அளவில்எங்கள் மாணவர்கள்அரசு கேரம்மற்றும் செஸ்விளையாட்டுப்போட்டிகளில் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
படிக்கும் போதே மாணவர்களுக்குமரங்கள் வளர்ப்பதற்குஊக்குவிக்கிறோம். தற்போதுபள்ளியைச் சுற்றிலும் 50க்கும்மேற்பட்ட மரங்களைநட்டு பராமரித்துவருகிறோம். மாணவர்கள்அவற்றை ஆர்வத்துடன் கவனித்துவருகிறார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,வழங்கப்பட்ட கம்ப்யூட்டர், லேப்-டாப் மூலம்தினசரி மாணவர்களுக்குகம்ப்யூட்டர் பயிற்சியும்முறையாக வழங்கப்படுகிறது.
விரைவில் எல்.சி.டி. ப்ரொஜெக்டர்களும், இன்டர்நெட் இணைப்பும் அளித்து ஸ்மார்ட்பள்ளியாகமாற்றுவதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும்கடுமையாகஉழைத்துவருகிறோம், என்றார்.
No comments:
Post a Comment