தமிழகத்தில் இன்று வெளியான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 90 புள்ளி 6 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
எட்டு லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் எழுதிய பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்வு பெற்று உள்ளனர்.
இதன் மூலம் 90 புள்ளி 6 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில் மாணவிகள் 93 புள்ளி 4 சதவிகிதம் பேரும், மாணவர்கள் 87 புள்ளி 5 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதனால் இந்த ஆண்டிலும் தேர்ச்சி சதவிகிதத்தில் மாணவர்களை மாணவிகள் முந்தி உள்ளனர். தேர்ச்சி பெற்று உள்ளவர்களில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 318 பேர் 60 சதவிகித மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளனர்.
மேலும் தமிழ் பாடத்தில் 229 பேரும், கணிதப் பாடத்தில் 9710 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 124 பேரும், வேதியியல் பாடத்தில் 1049 பேரும், உயிரியல் பாடத்தில் 387 பேரும் நூறு சதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.
தாவரவியலில் 75 பேரும், விலங்கியலில் 4 பேர் மட்டும் 100 சதம் மதிப்பெண் எடுத்துள்ளனர். புள்ளியியல் பாடத்தில் 47 பேரும், வரலாறு பாடத்தில் 31 பேரும், பொருளாதாரத்தில் 179 மாணவ, மாணவியரும் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 5167 பேர் அக்கவுன்டன்சியிலும், 1036 பேர் வணிக கணிதத்திலும், 577 பேர் கம்ப்யூட்டர் சயின்சிலும் 100 சதவித மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment