Friday 10 April 2015

புதிய தலைமை தேர்தல் அதிகாரி...!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தலைமை தேர்தல் கமிஷனாராக பதவி வகிக்கும் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.இவர் 2015-ம் ஆண்டு  ஜனவரி மாதம் 15ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து புதிய தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 2017-ம் ஆண்டு வரை இந்த பதவி வகித்து வருவார்.
நசீம் தற்போது தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.  நசீம் ஜெய்தி 1976-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தவர் ஆவார்

No comments:

Post a Comment