Monday 27 April 2015

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 “மெயின்” தேர்வு – மே மாதத்திலிருந்து ஜூனுக்கு மாற்றம்!

டிஎன்பிஎஸ்சி மூலமாக அடுத்த மாதம் நடைபெறவிருந்த குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வானது மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 79 பணியிடங்களுக்கான குரூப் 1 பிரதான தேர்வை எழுத 4389 பேர் தேர்வாகியுள்ளனர். இத்தேர்வானது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உட்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment