Saturday 17 January 2015

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இன்று(ஜனவரி 18ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத்
துறை  பொதுமக்களுக்கு
அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கான போலி சொட்டு மருந்து முதல் தவணை ஜனவரி 18ம் தேதியும், இரண்டாம் தவணை 22ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18, 22 ஆகியத் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெற்கு ரயில்வேயும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment