Wednesday 28 January 2015

மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவு தேர்வு


         தமிழகத்தில், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகள் என, பல மருத்துவ மேற்படிப்புகள் உள்ளன. இதில், 1,100 இடங்களும், எம்.டி.எஸ்., படிப்புக்கு, 40 இடங்களும் உள்ளன. 
 
          அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 சதவீதம் போக, மீதமுள்ள, 50 சதவீத இடங்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான, நுழைவுத்தேர்வு மார்ச், 1ம் தேதி நடக்க உள்ளது. 'மருத்துவ மேற்படிப்புகளில் சேர விரும்புவோர், இணையதள வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பிப்., 5ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்; மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
 
         'மருத்துவ மேற்படிப்புகளில் சேர, பிப்., 5ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மார்ச், 1ல் நடக்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment