Saturday 17 January 2015

3,5,8, வகுப்பு மாணவர்களுக்குஅடைவுத்தேர்வு வரும் 20ல் துவக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளி 3, 5 மற்றும் 8ம் வகுப்புமாணவர்களுக்கான அடைவு ஆய்வுத் தேர்வு 20ம் தேதி துவங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வுநடத்தி மதிப்பீடு செய்வதற்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அடைவு ஆய்வுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவு தேர்வுதேதிகளை கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புஅடைவு ஆய்வு தேர்வுகள் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.இதன் அடிப்படையில், 3 மற்றும் 5வகுப்பு மாணவர்களுக்கு 20ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.00 மணி, தமிழ் மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை கணிதம், ஆங்கிலம், 21ம்தேதி காலை 10.00 மணி முதல் 12.00 வரை. தொடர்ந்து, 8ம்வகுப்பு மாணவர்களுக்கு 22ம் தேதி தமிழ் காலை 10.00 -12.00 மணி வரை, கணிதம், 2.00-4.00 மணி வரை மற்றும் 23ம் தேதி, ஆங்கிலம், காலை 10.00-12.00 மணி, அறிவியல், 2.00- 4.00 மணி வரை நடக்கிறது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு இறுதியில் அனைத்து விபரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment