Friday 16 October 2015

விஜயதசமி தொடர் விடுமுறை: அக்.21-ல் அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

விஜய தசமியை பண்டிகைக்கு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் வரும் 21-ம் தேதி குறிப்பிட்ட சில சேவைகளை வழங்க தமிழக அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அஞ்சல் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஜய தசமி பண்டிகைக்காக வரும் 21 முதல் 23-ம் தேதி வரை அரசு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யாத முதல் நிலை அஞ்சல் சேவைகள் மட்டும் 21-ம் தேதி வழங்கப்படும். இவை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் விநியோக அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment