Thursday 12 February 2015

பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்

பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்: தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை நேரங்களில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது
கையை மார்பில் வைக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறதா? என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வி துறை கூறியிருப்பதாவது, ‘தங்கள் துறையோ, தமிழக அரசோ இத்தகைய அளவில் எந்தவித உத்தரவும், கட்டாயமும் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அப்படி செய்ய கட்டாயப் படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment