Friday, 30 October 2015

அஞ்சல் துறை செல்வமகள் திட்டம்: வயது 12-ஆக அதிகரிப்பு

அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வயது 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ("சுகன்யா சம்ரித்தி கணக்கு') மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் மொத்தம் 73 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.

TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED

GIRL STUDENT NATIONAL SCHOLARSHIP - DETAILS UPLOADING - STEP BY STEP GUIDE:

பள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - ONLINE - ல் மாணவியரின் விவரம் பதிவு செய்யும் வழிமுறை:

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லையாம், பிடித்தம் செய்யப்பட்டத் தொகையும் ஏதும் இல்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்.