Wednesday, 14 October 2015
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்
பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும் என சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம்!
வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பதுஅமலுக்கு வந்துள்ளது.வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.
பி.எட்., - எம்.எட்.,துணைத்தேர்வு
பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான டிசம்பர் தேர்வுக்கு, 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. “பி.எட்., மற்றும் எம்.எட்., பாடங்களுக்கு, டிசம்பரில் நடைபெற உள்ள துணைத்தேர்வை எழுத, 26ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
''தவறியவர்கள், நவம்பர், 5ம்தேதிக்குள் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம்,” என, ஆசிரியர் பல்கலைதேர்வு கட்டுப்பாடு அதிகாரி கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
TNPSC: 1863 காலியிடங்கள் நிரப்ப நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை,
Subscribe to:
Posts (Atom)
