10ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை

11.01.2016-மொழி பாடம் I
13.01.2016-மொழி பாடம் ll
18.01.2016-ஆங்கிலம் l
20.01.2016-ஆங்கிலம் ll
22.01.2016-கணிதம்
25.01.2016-அறிவியல்
27.01.2016-சமூகஅறிவியல்

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை .

11.01.2016-மொழிப்பாடம் I
12.01.2016 -மொழிப்பாடம் ll
13.01.2016-ஆங்கிலம் l
14.01.2016 -ஆங்கிலம் ll
18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல்
19.01.2016-கணிதம், நுண் அறிவியல் /ப்யூட்டிசன்/புட்மேனேஜ்மெண்ட்
21.01.2016-இயற்பியல் /பொருளியல்
23.01.2016-வேதியல்/அக்கவுண்டன்சி
25.01.2016-உயிரியல், தாவரவியல் /வரலாறு
27.01.2016-கணினி அறிவியல் /உயிர்வேதியியல் /புள்ளியியல்

TNPSC LATEST STUDY MATERIALS COLLECTIONS NEW

TNPSC GROUP II MODEL QUESTION AND ANSWER CLICK HERE 
GROUP II MATHEMATICS QUESTION WITH ANSWER-CLICK HERE
GROUP II SCIENCE QUESTION WITH ANSWER-CLICK HERE
GROUP II BASIC LEVEL QUESTION WITH ANSWER PAR I-CLICK HERE 
GROUP II BASIC LEVEL QUESTION WITH ANSWER PART II-CLICK HERE
GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIALS PART 1-CLICK HERE 
GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIALS PART 2-CLICK HERE 
GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIALS PART 3-CLICK HERE  
GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIALS PART 4-CLICK HERE 
GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIALS PART 5-CLICK HERE  
GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIALS PART 6-CLICK HERE  

வில்லங்கச் சான்று ஒரு ரூபாயில் பெற இங்கே வாங்க!

வில்லங்கச் சான்று ஒரு ரூபாயில் பெற இங்கே வாங்க!
சொந்தமான வீடு, மனை வைத்திருப்பவர்களுக்கு வில்லங்கச் சான்றிதழ்(ஈ.சி.) (EC - Encumbrance Certificate) பற்றி நன்றாக தெரியும்.
சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம்.
இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும். இப்போது இந்த ஈ.சி.யை ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும், வாங்கிவிடலாம்.
இதை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

Sunday, 15 November 2015

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

SABL LOGOS DESCRIPTION FOR CLASSROOM DISPLAY AND TO FAMILIARIZE STUDENTS.

SABL LOGOS DESCRIPTION FOR CLASSROOM DISPLAY AND TO FAMILIARIZE STUDENTS.

விஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தின் முக்கிய அரசு வேலைகளுக்கு டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு நடத்தி வருகிறது. தற்போது 813 விஏஓ காலியிடங்கள் இருக்கிறது. இதற்கான தேர்வு விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பிக்கும் கடைசிநாள் 14-ந்தேதி என்றும், கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 16-ந்தேதி என்றும் அறிவித்துள்ளது.மேலும், tnpsc.gov.intnpscexams.net,tnpscexams.in ஆகிய இணையதளங்கல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள ......

+ இந்திய பாலின விகிதத்தில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 11வது இடம்

+ இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 7வது இடம்

+ இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? # 23 வது இடம்

+ இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? # 16வது இடம்

ALL TRS TN.... ABBREVIATIONS


ABL:Activity Based Learning
ADEPTS:Advancement of Education performance through teachers support
ALM:Active Learning Methodology

Sunday, 1 November 2015

இந்த வார வல்லமையாளர்!


Chokkalingam Lவல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும்,
அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் சென்ற வாரத்தில் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காக வல்லமை இதழ் சார்பில் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைப்பு: டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.அதேசமயம் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்!

Return to frontpageஆசிரியர் - வருமானத்துக்காக உழைப்பதில்லை; மாணவர்களின் வருங்காலத்துக்காக உழைக்கிறார்.

கல்வி, வழக்கமான முறையில் கற்பிக்கப்படாமல் வகுப்பறையைத் தாண்டியும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர் ஸ்ரீ.திலீப். தகவல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருது, மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் விருது, எல்காட்டின் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள், பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். பள்ளிக் கல்விக்கென ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு

நவம்பர் -2015 மாத குறிப்பு!!!

🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
     NOVEMBER DAIRY
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

7th Grievence day

RL DAYS:

02.11.15 Kallarai thirunal
11.11.15 Diwali nonbu (Maybe)
25.11.15 Thirukarthigai


Holidays 10.11.15 Diwali

CRC days
07.11.15 Primary CRC
14.11.15 Upper Primary CRC

New Appointment Teachers- dist level 5 days training 02.11.15- 06.11.15

VITAL training for upper Primary Teachers 05.11.15 & 06.11.15.

குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

CBSE RESULTS- Central Board of Secondary Education

CBSE RESULTS-
Central Board of Secondary Education
Central Teacher Eligibility  Test (CTET) September 2015 Examination Results Published

Friday, 30 October 2015

அஞ்சல் துறை செல்வமகள் திட்டம்: வயது 12-ஆக அதிகரிப்பு

அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வயது 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ("சுகன்யா சம்ரித்தி கணக்கு') மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் மொத்தம் 73 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.

GIRL STUDENT NATIONAL SCHOLARSHIP - DETAILS UPLOADING - STEP BY STEP GUIDE:

பள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - ONLINE - ல் மாணவியரின் விவரம் பதிவு செய்யும் வழிமுறை:

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லையாம், பிடித்தம் செய்யப்பட்டத் தொகையும் ஏதும் இல்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல். 

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என உறுதி செய்யவேண்டும்.
மழையில் இருந்து காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்ககூடாது எனவும், அதனால் இடி, மின்னல் மூலம் ஆபத்து ஏற்படும் என அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

*.இணைய தள முகவரிக்கு செல்லவும்.
*.CLICK HERE - ELECTORAL ASSISTANT SYSTEM
*.உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,
*.தேடலை சொடுக்கவும்.
*.உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.
*.பிறகு வாக்காளர் அடையாள அட்டை தேடல் மூலம் பெறப்பட்ட வாக்குச் சாவடி எண்ணில், உங்கள் தெரு இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து , அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து , உங்கள் தொடர் எண்ணை அறியலாம் .
*.தபால் வாக்கு செலுத்த பாகம் எண் மற்றும் தொடர் எண் அவசியம்.
*.தேர்தல் பணிக்கான படிவத்திலும் இந்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது.

TPF transfer to AG Office - GO & Director Proceedings:

TPF transfer to AG Office | GO No.169 Date:20.10.2015 - Click Here

          G.O Ms : 169 - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - அரசாணை வெளியீடு& தொடக்ககல்வி இயக்குநர் செயல்முறைகள்

நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி: ஆறு, குளங்களைக் காக்க பொம்மலாட்டப் பிரச்சாரம் - ஊர் ஊராகச் செல்லும் கோவை ஆசிரியர்


அழிந்து வரும் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம் மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ்.கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் சாரணர் ஆசிரியர் ஆனந்தராஜ். இவர் கடந்த 20 ஆண்டு களாக ஊர் ஊராக சென்று, தமிழகத்தின் ஆறு, ஏரி, குளங்கள் மாசுபடுவது குறித்து பொம்மலாட்டக் கலை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.


கோவையில் சமீபத்தில் ‘ஓசை’ அமைப்பின் மாதாந்திர சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டத்தில் குளங்கள் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டத்தை நடத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அரசின் விருதுகளைப்பெற வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி வருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இதனடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே,

சிறந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதுகள் - புதிய நெறிமுறைகள்:தமிழக அரசு உத்தரவு

சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன் வெளியிட்ட உத்தரவு:
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்றும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்றும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு விருதாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, விருதுகள் வழங்குவதற்கான புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் விவரம்:

CRC தகவல்

SSA- RC.No.1108/Trg/2015

Primary CRC on 07.11.2015
Topic: Every day Science and Simple Projects on CCE

Upper primary CRC on 14.11.2015
Reg: Preparation for Competitive and Talent Search examination.

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs in Govt Schools.

Primary Level at District
02.11.2015 to 06.11.2015
(SABL, Maths Kit,CCE)

Upper primary Level at Dt
16 to 20.11.2015
(ALM, CCE)

RPs: BRTEs (Well Trained)

CPS account slip 2009. முதல் பிப்ரவரி 2015 வரை விடுபட்ட தொகைகள் பதிவுடன்


இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971)  login செய்யவும்.


பின் annual account slip ல் சொடுக்கவும்

பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் .

TAMILNADU SCHOOL EDUCATION DEPARTMENT GENERAL TRANSFER COUNSELLING 2015 APPLICATION ALL TYPES OF POST:

பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்
தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்
தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்
தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி!

அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.
பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ

அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.

அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அக்டோபர் 26-யிலிருந்து நவம்பர் 9-க்குள்
www.alagappauniversity.ac.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.
Hon'ble CM announced 6% DA for Government Employees & Teachers with effect from July 01.07.2015
>DA raised from 113% to 119%
>3Months DA Arrear from July to September 2015

இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு


இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க லாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள கே.அருள்மொழி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங் களில்

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.

இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும். சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு

அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.
அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அக்டோபர் 26-யிலிருந்து நவம்பர் 9-க்குள்www.alagappauniversity.ac.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.